Nilamay Poru Nilamay Land

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

புரியாதா
பேரன்பே
புரியாதா
பேரன்பே
ஓஹ்... தனியே... தனியே... தனியே...

October மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய
ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய

October மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம்
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம்
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

புரியாதா
பேரன்பே
புரியாதா
பேரன்பே
புரியாதா

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு jeans அணிந்த சின்னக்கிளி hello சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா
பேரன்பே
புரியாதா...



Credits
Writer(s): R Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link