Poikkaal Kuthirai

பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா

காலையில் கண் விழிக்கையில் இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை
சாலையில் கல் மோதினால் நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை
கொடுத்த இடங்களை நிரப்ப வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும் சத்தம் அதை சொல்லிவிடும்

சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேறி
உன்னை நீ உற்றுப்பார்

இந்த kaleidoscope'ல் கண்ணாடி துண்டுகளை
உருட்டுவது யார்?, மிரட்டுவது யார்?
துரத்துவது யார்?, புரட்டுவது யார்?
யார், யார், யார், யார்?

இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா?
இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா?
இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா?
இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா?

மூச்சு வாங்குதே, மூச்சு வாங்குதே
விட்டு, விட்டு, விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே, காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

இவன் மாய தீயிலே வீழுந்தானா?
இனி காயம் இன்றியே எழுவானா?

மூச்சு வாங்குதே, மூச்சு வாங்குதே
விட்டு, விட்டு, விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே, காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

இவன் பாதை எங்கிளும் வலிதானா?
இது தேடி வந்ததில் விலை தானா?

மூச்சு வாங்குதே, மூச்சு வாங்குதே
விட்டு, விட்டு, விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே, காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே



Credits
Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link