Poyum Poyum

போயும் போயும்
மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும்
மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளதில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன்பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைதானே
இதைய போர்வையில் மறைதானே

போயும் போயும்
மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே

கைகளை தோழில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோழில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும்
மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும்
மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே



Credits
Writer(s): Kannadhasan, K V Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link