Aasaiye Kaathule

ஆசைய காத்துல தூதுவிட்டு
ஆடிய பூவுல வாடைப்பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடைத்தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்டை நின்னு

ஆசைய காத்துல தூதுவிட்டு
ஆடிய பூவுல வாடைப்பட்டு

வாசம் பூவாசம்
வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம்
மல்லியப் பூ மணம் வீசும்

நேசத்துல
வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது
சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையிலே
கொஞ்சும் ஜாடையப்
போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூதுவிட்டு
ஆடிய பூவுல வாடைப்பட்டு

தேனோ பூந்தேனு
தேன் துளி கேட்டது நானு
மானோ பொன் மானு
தேயிலத் தோட்டத்து மானு

ஓடி வர
உன்னைத் தேடி வர
தாழம் பூவுல தாவுறக் காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பாக்கும் போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

ஆசைய காத்துல தூதுவிட்டு
ஆடிய பூவுல வாடைப்பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடைத்தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்டை நின்னு



Credits
Writer(s): Ganghei Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link