Karugu Mani

ரா-றாரே-றா-ர-றார-ரா-ரா-ரா
ரா-றாரே-றா-ர-றார-ரா-ரா-ரா

கருகுமணி கருகுமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
எனக்குன்னு பாடுதடி

குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசில் வரும் கோளாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு

கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா

தந்தன-தன-தனனா-நானனா
தந்தன-தன-தனனா-நானனா
தந்தன-தன-தனனா-நானனா
தந்தன-தன-தனனா-நானனா

மாவெடுத்தேன் கோலத்துக்கு
உன் முகம் வரைஞ்சு வச்சேன்
காய் எடுத்தேன் கொழம்பு வைக்க
ரசத்திலே போட்டு புட்டேன்

கோர புல்லு பாய் எடுத்தேன்
உறக்கத்த தொலைச்சுபுட்டேன்
கோழி சத்தம் கேட்கும் முன்னே
ஒன் குரல் கேட்டு புட்டேன்

கிழக்கு தெக்க வடக்கு
எங்கும் தெரியும் உன் ஆசை முகம்
எனக்கு அடி எனக்கு
நீ இருக்கும் திசை கோயில் குளம்
காத்துல கேக்கும் ஓசை
என்ன சொல்லுதோ
கண்மணி நடந்த
கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு

கருகுமணி கருகுமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா

மூச்சு வரும் ஆழத்துல
உன்ன நான் பதுக்கி வச்சேன்
மூங்கிலிலே காத்து தரும்
இசைபோல் ரசிச்சுகிட்டேன்

வளர்பிறையா முதல் முதலா
எதிர்ல உன்ன பார்த்தேன்
தேய்பிறையா தினம் குறைஞ்சு
உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்

குழந்தை மனம் இருந்தா
இந்த உலகம் ரொம்ப அழகாகும்
மனசு எழுந்து விழுந்தா
அது காதல் என்னும் கடலாகும்
கோபுரம் மேலே ஏறி
பாட்டு பாடவா
மாடத்தில் கூட போட
நானும் கூட வரட்டா

கருகுமணி கருகுமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசு இப்போ பதினாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு

கருகுமணி கருகுமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link