Vaarthai Thavarivittai

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி

பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி

நீ போன பாதை எதுவென்று சொல்லு
நானும் உன் பின்னே அங்கே வர
இப்போதும் கூட எதுவென்று சொல்லு
உன் வீடு தேடி நானும் வர
தேர் வரும் நாள் வரும் என்று நினைத்தேனே
தீ உனை தீண்டவோ திரும்பி நடந்தேனே
பூமியின் தேவதை புழுதி மண் மூடலாமோ

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி



Credits
Writer(s): Arivumathi, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link