Mudhal Murai

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன்னருகே நான் இருந்தால சிலிர்கிறதே

நீ விளையாட்டுப் பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
எனைத் தாயைப் போலத் தாங்க வேண்டும் மடியினிலே

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

நீ அருகில் தோன்றும் நேரமே
வானிலையும் மாறிப் போகுதே
நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும்
வரமது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

நீ நடந்துப் போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குதே
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னைத் தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையேத் தாங்குவேன்
நெஞ்சில் நினைத்தே
சூரியன் உதிப்பதே ஒரு முறை காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே

அந்த மழை மேகம் யாவும்
இறங்கியே உனைத் தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போக மாட்டேன்
தெய்வமும் நீ

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே



Credits
Writer(s): Lalitha Anandh, Premgi Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link