Uyirin Melloru Uyir Vanthu

உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானோ
இதற்கு பேர் என்ன காதலே
இந்த நிலை வர காரணம் நீதானே
உனக்காக நெஞ்சம் சாயுமே
அதுதான் கடவுள் வரமே

உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் ஓஹோ

மொழியேதும் தெரியாமல்
விழிகள் ரெண்டும் பேசுதே
விழியோடு விழி சேர்ந்தால்
புதிய மொழி தோன்றுதே

வலி கூட சுகம் தானே
இது காதல் முகம் தானே
ரசித்தேனடி தினம் தினம்

உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்...

வெயிலோடு மழை தூவ
பருவங்களை மாற்றினாய்
விழி இரண்டில் மெதுவாக
உனது நிறம் ஊற்றினாய்

இந்த காதல் கடல்தானே அதில் தேகம் துளிதானே
அலைபாயுதே மனம் மனம்

உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானோ
இதற்கு பேர் என்ன காதலே
இந்த நிலை வர காரணம் நீதானே

உனக்காக நெஞ்சம் சாயுமே
அதுதான் கடவுள் வரமே

உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் ஓஹோ



Credits
Writer(s): Yuvan Shankar Raaja, Niranjan Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link