Yaro Yaro Entha Devathai

யாரோ யாரோ இந்த தேவதை?
பெண்ணாய் மண்ணில் வந்த தாரகை
யாரோ யாரோ இந்த தேவதை?
பெண்ணாய் மண்ணில் வந்த தாரகை

இன்று பூத்த பூ போலே சிரிக்கிறாள்
சொல்ல வார்த்தையின்றி மெளனம் தருகிறாள்

என்ன தான் பேசுவதோ?
எதை தான் பேசுவதோ?
வெண்ணிலா வெளிச்சம் வந்து
ஏதேதோ பேசிடுதோ

யாரோ யாரோ இந்த தேவதை?
பெண்ணாய் மண்ணில் வந்த தாரகை

பூமி மீது கோடி பூக்கள் இருக்கலாம்
இந்த பெண்ணின் வாசம் பூவில் இருக்குமா?

வானவில்லின் ஏழு வண்ணம் ரசிக்கலாம்
இவள் வெட்கம் காட்டும் வண்ணம் அங்கு இருக்குமா?
பறவை பேசும் பேச்சை கேட்டக பாசை தேவை இல்லை
கண்கள் சூழும் கங்கை விளக்கே சாட்சி தேவை இல்லை

என்ன தான் பேசுவதோ?
எதை தான் பேசுவதோ?
வெண்ணிலா வெளிச்சம் வந்து
ஏதேதோ பேசிடுதோ

யாரோ யாரோ இந்த தேவதை?
பெண்ணாய் மண்ணில் வந்த தாரகை

இந்த வெண்ணிலா காலை மறையுமா?
இது கண்கள் கண்ட கனவாக கலையுமா?
நாளை நெஞ்சம் இவளை மறக்குமா
இல்ல நீரில் போட்ட கோலம் போல கரையுமா?

வெயிலும் வந்தால் உருகும் என்று பனித்துளி நினைத்தில்லை
பனித்துளி விட்டு விலகும் என்று புள்ளும் நினைத்ததில்லை

என்ன தான் பேசுவதோ?
எதை தான் பேசுவதோ?
வெண்ணிலா வெளிச்சம் வந்து
ஏதேதோ பேசிடுதோ

யாரோ யாரோ இந்த தேவதை?
பெண்ணாய் மண்ணில் வந்த தாரகை



Credits
Writer(s): Na Muthukumar, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link