Yelelo (From "Naan Sigappu Manithan")

ஏலேலோ மெதப்பு வந்திருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
கதவ துறந்துகிட்டு காத்து அடிக்குதடா
மனசு பறக்குதுடா டோய்

விழுந்தாலும் எழுந்தாலும்
மறுநொடியில் விழுந்தாலும்
அடடா விழுந்த்திலும்
லாபம் ஒன்னு கிடைக்குதே

நின்னாலும் நடந்தாலும்
நேரா போய் கவுந்தாலும்
அடடா அதிஷ்டம் வந்து
கதவை தட்டி அழைக்குதே

தூங்கும் பொம்மைக்குதான்
சாவி யாரு கொடுத்தது
தோடா கைய நீட்டி
கால ஆட்டி நடக்குது

நிகழ்காலம் எதிர்காலம்
நலமாக இனிமாறும்
எங்கோ மதிக்கிறனே
என்ன பிடிங்கடா

நத்தைய போலிருந்தேன்
பட்டுன்னு சுருண்டுக்குவேன்
நச்சுனு எழுந்து இப்போ
நடக்க தோணுதடா

கப்பலா நான் இருந்தேன்
ஆடினா கவிழ்ந்துக்குவேன்
புயல தாண்டி இப்போ
நீந்த தோணுதடா

பஞ்சரா கிடந்த பந்து
சிக்ஸரு அடிக்குதடா
சுக்கரன் திசை எனக்கு
சலாம் வைக்குதுடா

சந்திரன் என்ன விலை
சூரியன் என்ன விலை
மொத்தமா வாங்குறேன்
கேட்டுகோடா

ஏலேலோ மெதப்பு வந்திருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே

மழைய மழை அடிச்சு
மெதுவா இலை விரிச்சு
தூங்கு மூஞ்சி மரம்
பூத்து குலுங்குதே

பறந்தா கிளியுமுன்னு
பரனில் கிடந்த பட்டம்
மாஞ்சா போட்டு இப்போ
பறக்க தொடங்குதே

விதையா புதைவதெல்லாம்
மரமா எழுந்திட்த்தான்
இது வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜ்ஜியம் ஆனாலும்
பக்கத்தில கோடு கிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா

ஏலேலோ மெதப்பு வந்திருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே



Credits
Writer(s): Vennelakanti, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link