Nallathor Veenai

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
சொல்லடி சிவசக்தி
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்

நசையறு மனம் கேட்டேன் நித்தம்
நவம் எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் நித்தம்
நவம் எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடு நல் அகம் கேட்டேன்
தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடு நல் அகம் கேட்டேன்

அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி
என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?



Credits
Writer(s): Subramanya Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link