Katru Veliyidai - Desh - Tisram

காற்று வெளியிடைக் கண்ணம்மா

காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
இந்த காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்

அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்

பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்
பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்

என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே
என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே

இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
துயர் போயின, போயின
துயர் போயின...

துயர் போயின, போயின துன்பங்கள்
நின்னைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே
துயர் போயின, போயின துன்பங்கள்
நின்னைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே

என்றன் வாயினிலே அமுதூறுதே, அமுதூறுதே, அமுதூறுதே, அமுதூறுதே
என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே
என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே
உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே
என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே

இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா...
கண்ணம்மா...
கண்ணம்மா...
கண்ணம்மா...



Credits
Writer(s): Subramanya Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link