Veenaiyadi Neeyenakku

பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா

வீணை அடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு
காணும் இடம் தோரும் நின்றன் கண்ணின் ஒழி விசுதடி மானுடைய பேரரசி வாழ்வு நிலையே
கண்ணம்மா

வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
பானம் அடி நீ எனக்கு
பாண்டம் அடி நான் உனக்கு
ஞான ஒழி வீசுதடி நங்கை நின்றன் ஜோதி முகம் ஊனமறு
நல்லழகே ஊரு சுவையே
கண்ணம்மா

வெண்ணிலவு நீ எனக்கு
மேவு கடல் நான் உனக்கு
பண்ணு சுத்தி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா

வீசு கமழ் நீ எனக்கு, விரியுமலர் நான் உனக்கு பேசுபொருள் நீ எனக்கு, பேணுமொழி நான் உனக்கு நேசமுள்ள வான்சுடரே நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா

காதல் அடி நீ எனக்கு காந்தம் அடி நான் உனக்கு வேதம் அடி நீ எனக்கு வித்தை அடி நான் உனக்கு போத முற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே நாதவடிவானவளே நல் உயிரே கண்ணம்மா

நல்லவுயிர் நீ எனக்கு, நாடியடி நான் உனக்கு செல்வமடி நீ எனக்கு, சேமநிதி நான் உனக்கு எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா

தாரையடி நீ எனக்கு, தண்மதியம் நான் உனக்கு வீரமடி நீ எனக்கு, வெற்றியடி நான் உனக்கு தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய்ச் சமைந்தாய் உள்ளமுதமே கண்ணம்மா



Credits
Writer(s): Unnimenon
Lyrics powered by www.musixmatch.com

Link