Ayirathil Oruthiyamma

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ...

ஆயரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை
பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வது உண்மை

பாவிகள் நெஞ்சம்
உரைத்திடும் வஞ்சம்
உண்மை என்று சொல்வதற்கு
தெய்வமும் அஞ்சும்
தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ
தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
கண் என்ன கண்ணோ
நெஞ்சென்ன நெஞ்சோ
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ
ஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ



Credits
Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link