Vaazhkkayae

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்

அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவர் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்

நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பாலைதானா
வறண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்

ஹேய்... ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ... ஆரிராரோ ஆரிராரோ
மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதற்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link