Oru Santhana Kaatu

ஒரு சந்தண காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே

குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே

நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே

என் மாமன் அன்புக்கு
கோயில் கொண்ட தெய்வம் கூட ஈடில்லயே
எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ
சொந்தம் பந்தம் வேரில்லயே

என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே

குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே

வாங்கி வந்த மல்லிகைப்பூ
சூடிக் கொள்ள அன்புத் தாரம் இல்லே, தாரம் இல்லே
போகயிலே என்னிடத்தில்
சொல்லிக் கொள்ள கூட நேரம் இல்லே நேரம் இல்லே

நான் பெற்ற செல்வமே
சொந்தம் என்று உன்னை விட்டால் யாரும் இல்லை
நாள் தோரும் அம்மாடி
கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும் நீரும் இல்லை

காயங்கள் காலம் முழுக்க ஆராதோ
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே

குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே
சிறுசிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link