Anjugajam Kanchipattu

அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு
சுத்திக்கட்டிய அத்தைமக கண்ணிச்சிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்கப் பக்கம் வந்தேன் ஓரம் கட்டு

மாலை நேரப் பூங்காத்து
வீசும் அந்த மாந்தோப்பு
உன்னோட உட்காந்து நான் பேச
நல்ல இடம் தான்

அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு
சுத்திக்கட்டிய அத்தைமக கண்ணிச்சிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்கப் பக்கம் வந்தேன் ஓரம் கட்டு

ஆத்து ஊத்து என ஊரும்
கைய கோத்ததும் ஆயிரம் மோகம்
போதும் போதும் என கூறும்
அந்த ஆத்தரம் பாத்ததும் தேகம்

நெடுநாளா அடக்கிவச்சா
நிக்காது எப்போதும் ஆசை
அதுக்காக அடம் புடிச்சு
வைக்காதே இப்போது பூசை

இன்னும் ஒரு வேலி ஏனடி?
என்னுடைய தோட்டம் தானிது
கொஞ்சம் பொறு தாலி ஏரட்டும்
சொன்னபடி கேட்க்கும் மானிது
வட்ட நிலவ கட்டியணைக்க
பஞ்சாங்கம் பாக்காது வானம்

அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு
சுத்திக்கட்டிய அத்தைமக கண்ணிச்சிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்கப் பக்கம் வந்தேன் ஓரம் கட்டு

மாலை நேர பூங்காத்து
வீசும் அந்த மாந்தோப்பு
உன்னோட உட்காந்து நான் பேச
நல்ல இடம் தான்

அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு
சுத்திக்கட்டிய அத்தைமக கண்ணிச்சிட்டு

ஏத்தி ஏத்தி வச்ச சூடு
எப்போ ஆறிடும் நீ கொஞ்சம் கூறு
மாத்தி மாத்தி ரெண்டு பேரும்
முத்தம் வாங்கிட நீங்கிடும் பாரு

உனக்கே தான் எடுத்தக்குனும்
என்மேனி நீஆளும் தேசம்
இருந்தாலும் மறச்சி வச்சி
நீ போட கூடாது வேஷம்

பக்கம் வந்து நீயும் தீண்டினால்
வெட்கம் வந்து ஆள கொல்லுது
அம்மணியே அழகு என்னையே
பம்பரமா ஆட்டி வைக்குது
உன்னை பிரிஞ்சி எட்டி இருக்க
என்னாலே ஆகாது ராசா

அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு
சுத்திக்கட்டிய அத்தைமக கண்ணிச்சிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்கப் பக்கம் வந்தேன் ஓரம் கட்டு

மாலை நேர பூங்காத்து
வீசும் அந்த மாந்தோப்பு
உன்னோட உட்காந்து நான் பேச
நல்ல இடம் தான்

அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு
சுத்திக்கட்டிய அத்தைமக கண்ணிச்சிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்கப் பக்கம் வந்தேன் ஓரம் கட்டு



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link