Kalvari Anbai

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை

எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே
கண்கள் கலங்கிடுதே

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ

அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே
அப்பா உம் மனம் பெரிதே

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ

எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
ஏற்று என்றும் நடத்தும்

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே



Credits
Writer(s): Jf Sathy Victor, Simpson
Lyrics powered by www.musixmatch.com

Link