Sonnallum

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது – நீ

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே

சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு
கிழக்கு-க்கு நீ தன் உயிரே

எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும்
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே

எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை

பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சி கொடியே

சொன்னாலும்
சொன்னாலும் கேட்டிராது கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link