Onnum Puriyala

ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

நெத்திப் பொட்டுத் தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

மனம் புத்தித் தாவியே
தறிக் கெட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது

ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே

அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது

அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது

ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே

கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா

அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது

ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல...



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link