Chillendra Chillendra - From "Thirumanam Enum Nikkah"

या मेरे मौला, शुक्र है तेरा
या मेरे मौला, शुक्र है तेरा

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
மெஹெந்தி வரைந்த வானிலே தேடி அலைந்தேனே

हमारे दिलों का है ये कहना
நேசத்தின் சாரல்கள் தூவ தூவ
तेरी प्यारी अदाएँं तेरा
बाँकपन क्या बात है वल्लाह
வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின்
கண்ணங்களில் கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன், தேடி அலைந்தேன் ஒ
या मेरे मौला शुक्र है तेरा
या मेरे मौला शुक्र है तेरा

गर्दिश-ए-दुनिया
சுற்றிடும் உலகம் சுழலும் ஓசை காதில் கேட்குமா
மௌனத்தின் வெளியில் ஓங்கார ஒலியும் ஆமினும் கேட்குமே
உன் மூச்சு நின்றாலும் உன்னைத்தான் நீங்காத சொந்தம் எது?
கண்மூடி போனாலும் உன்னோடு சாய்கின்ற நிழல் தானது
என்னைப்போல் பெண்ணொன்று அச்சாக இன்னொன்று
கண்டேனே நானின்று யாரென்று சொல்
தாயா? உன் சேயா?
நேசத்தை சொல்ல வார்த்தை வசப்படுமா
சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
மெஹெந்தி வரைந்த வானிலே பாடி பறந்தேனே

இருண்ட வானம் விண்மீன்கள் கூட்டம் வெண்ணிலா என்ன?
ஏழை ஒருவன் கந்தல் குடைபோல் தொலைந்த என் மணம்
மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளுர்ச்சியின் சலனம் தான் எது?
சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூமழை சாரலே அது
எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்
பாசமா நேசமா
महबूब मेरा होगा तू कब सजना?
வாழ்வே உன்னுடன் என்னுடன் இணைந்திட வா
இனியெல்லாம் நீதான் நீயே நான்தான்

या मेरे मौला, शुक्र है तेरा

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே பாடி பறந்தேனே

या मेरे मौला, शुक्र है तेरा
या मेरे मौला, शुक्र है तेरा (ஆ)



Credits
Writer(s): Mohamaad Ghibran, Munna Shaoukat Ali, Kadhal Mathi
Lyrics powered by www.musixmatch.com

Link