Moongil Vittu

மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன

பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன

காற்றை போல் வெயில் ஒன்று கடந்து போன பின்
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன

மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும் சேதி என்ன

பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன



Credits
Writer(s): Vairamuthu, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link