Edhedho Ennamvandhu (From "Amarakaaviyam")

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சம் தைத்து போக...
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சம் தைத்து போக...
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்ட கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன் துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பாய் நெஞ்சில் வார்த்தாய்
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சம் தைத்து போக...

உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்

வாசம் வண்ணம் பூசிக்கொண்டே
தென்றல் வந்து நிற்க கண்டேன்
போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்
மீண்டும் திறந்து செல்வோம்

பயணம் எங்கே முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும்வரை
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சம் தைத்து போக...

தோளில் மெல்ல சாயும் நொடி
தூக்கும் புது தொப்புள் கொடி

தாகம் கொண்டு உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி

அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும் பந்தம்
எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னால்
உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சம் தைத்து போக...
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்ட கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன் துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பாய் நெஞ்சில் வார்த்தாய்



Credits
Writer(s): Ghibran, Parvathy
Lyrics powered by www.musixmatch.com

Link