Yathe Yathe (From "Aadukalam")

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ

மீன் கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள
அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்குகாட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலைகாலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப்போனேனே நானே நானே

புயல் தொட்டமரமாகவே
தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன
நான் தலைகாலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடுமாறிப்போனேனே நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
நூல் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோக்குற

எனை ஏனடிவதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக் கொள்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள

அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடுமாறிப்போனேனே நானே நானே



Credits
Writer(s): G V Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link