Unna Paartha Naeram (From "All in All Azhagu Raja")

ரப்பபா ரபபிபா
ரப்பபா ப ப ப ரபபிபா
ரப்பபா ரப்பபா

உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்

கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
இறைவனும் எழுதிடும் விதியே
பனிவிழும் மலர்வனக் கிளியே

ச ரி க ம ப த நி ச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம் இது நவரச தினம்
இனி தினம் புது புது சுகம் சுகமே
ரப்பபா ரபபிபா
ரப்பபா ப ப ப ரபபிபா

உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே

தம் தம் த தம் தம் நிதம்
மனசுக்குள்ள உந்தன் முகம்
நம் தம் த தம் தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மனம்

அடி வான் நிலா இனி தேன் நிலா
தித்திக்கும் தேனில் பலா
சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா

சுடச் சுட பரவிடும் சுகங்களும் நீயே
தவம் இன்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
ஓ மயக்கங்கள் வரும் புது தயக்கங்கள் வரும்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே
ரப்பபா ரபபிபா
ரப்பபா ப ப ரபா பிபா

தம் தம் த தம் தம் நதம்
கண்ணசைவில் செய்தாள் வதம்
தம் தம் த தம் தம் வசந்தம்
என் மனது உந்தன் வசம்
என் தேவதை இதழ் மாதுளை
சிற்றென்ன வாசல் சிலை
வரும் வான் மழை அது தேன் மழை
முந்தானை ஆகும் குடை

தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே
இதழ்களில் விடை உள்ள விடுகதை நீயே
ஓ நிலவென முகம் இது வளர்பிறை தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா ரபபிபா
ரப்பபா ப ப ரபபிபா
உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்



Credits
Writer(s): N Muthu Kumaran, Ss Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link