Palakkattu Pakkathile

ஏன் இப்படி முகமெல்லாம் வேர்த்துகொற்றது
நேக்கு தெரியல
அச்சச்சோ ஏன் இப்படி கையெல்லாம் படபடன்னு நடுங்குறது
நேக்கு தெரியல
உக்காருங்கோ

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா

அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லி தர பள்ளியில்லையே
கவிதையிலும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இரண்டு ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா

பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தாா்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தாா்
பாா் கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தாா்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தாா்

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா



Credits
Writer(s): Yuvanshankar Raja, Kannadasan
Lyrics powered by www.musixmatch.com

Link