Nenjae Yezhu

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்
உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை



Credits
Writer(s): A R Rahman, Kutti Revathi
Lyrics powered by www.musixmatch.com

Link