Chillena

சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோ
நான் மாறினேன் பெண்ணே oh-oh, oh-oh, oh-oh, oh-oh

அட கருப்பட்டியே என் சீனி கிழங்கே
சிரிச்சு கவுக்காத
என் கண்ணு குட்டியே கம்மா கரையில நீ
கப்பல் ஒட்டாத
கண்ணால பாக்காம
கண்ணாலம் பண்ணலாமா
கைகோர்த்து போவலாமா

கொஞ்சம் பார்த்துவிடு, கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட
கோடை கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஹோ... உன்னாலே... உன்னாலே...
நூலில்லா காற்றாடி ஆனேனே
அடி பெண்ணே, அடி பெண்ணே
நான் விழுந்தால்
உன் பாதம் சேர்வேனே

உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய், நான் மாறினேன் பெண்ணே...

சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபம்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் நகலே

ஒரு நாளும்... குறையாத...
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும்... அணையாத...
ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய்...
எனை தாக்கினாய் முன்னே oh-oh, oh-oh, oh-ohoo...



Credits
Writer(s): G V Prakash Kumar, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link