En Kanmani - From "Chittukkuruvi"

என் கண்மணி, உன் காதலி
இள மாங்கனி
உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே, சிரிக்கின்றதே
நான் சொன்ன joke ஐ கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ

(நன்னா சொன்னேள் போங்கோ)

என் மன்னவன், உன் காதலன்
எனை பார்த்ததும், ஓராயிரம்
கதை சொல்கிறான், கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி

இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில், அருகாமையில்
வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ

(இந்தாம்மா கருவாட்டுக்கூட முன்னாடி போ)

என் மன்னவன், உன் காதலன்
எனை பார்த்ததும், ஓராயிரம்
கதை சொல்கிறான், கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி

(தேனாம்பேட்டை super market எறங்கு)

மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி, உன் காதலி
இள மாங்கனி
உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே, சிரிக்கின்றதே
நான் சொன்ன joke ஐ கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ

என் மன்னவன், உன் காதலன்
எனை பார்த்ததும், ஓராயிரம்
கதை சொல்கிறான், கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link