Aymbathilum - Language: Tamil; Film: Rishimoolam; Film Artists: Sivaji Ganesan, K.R.Vijaya

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
ஐம்பதிலும் ஆசை வரும்

என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன் மேனியே
என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன் மேனியே
வீடு வரும் போது ஓடிவரும் மாது
நினைவில் இன்னும் நிற்கின்றாள்
ஆறுசுவை செய்தாள் அருகிருந்து தந்தாள்
அன்புமிக்க தாய் ஆகின்றாள்

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

சம்சாரம் தன்னோடு பேச சுவரேறி குதித்தேன் அம்மா
சம்சாரம் தன்னோடு பேச சுவரேறி குதித்தேன் அம்மா
தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும்
தனியே நினைத்தாள் துடிக்கின்றாள்
காலம் எனும் ஒன்று கனிந்து வரும் போது
கணவனுக்கே உயிராகின்றாள்

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே
தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே
பெற்றடுத்த பிள்ளை கற்றுக்கொண்ட தொல்லை
இடையில் இருக்கும் தடையாகும்
செய்தவளும் நீ தான் சேர்ந்தவளும் நீ தான்
என்னிடத்தில் தவறில்லையே

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஓ-ஓ-நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link