Kanmani Nillu

கண்மணி நில்லு காரணம் சொல்லு

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா

நடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறுமா

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் தெரித்து மலர்வளை தொடுத்து
ஏழை என் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா

இதயத்தில் தோன்றும் காதல் நிலவே
உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய்
உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து
உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய்
காதலின் விதியே இதுவானால்
கல்லறை தானே முடிவாகும்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா

கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம்
காதல் நினைவும் மாறுமா
கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்
கல்லறை முடிவை தாங்குமா
காதலை வென்ற காதலன் உயிரை
பிரிந்தால் இனியும் வாழுமா



Credits
Writer(s): Manoj, Abavanan
Lyrics powered by www.musixmatch.com

Link