Thaaliyae Thevaiyillai (From "Thaamirabharani")

தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி

உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே
அடி சிறுக்கி... நீ தான் என மனசுக்குள்ள
அட கிறுக்கி... நீ தான் என் உசுருக்குள்ள
உன்ன நினைச்சி நான் நடந்தேன் என் ஊருக்குள்ள
என்ன உருக்கி...

தாலியே தேவையில்லை நான் தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி

பத்து பவுன் பொன்னெடுத்து, கங்குக்குள்ள காயவச்சி
தாலி ஒண்ணு செய்ய போறேன் மானே மானே
நட்ட நடு நெத்தியிலே ரத்த நிற பொட்டுவச்சு
உன் கைபுடிச்சி ஊருக்குள்ளே போவேன் நானே
அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்
இது என்ன இது என்ன கனவுல கனவுல குழப்பம்
இது காதல் இல்ல அதுக்கும் மேலே தான்
அட கிறுக்கா... நான் உனக்காக பொறந்தவடா
அரை கிறுக்கா... நான் உனக்காக அலஞ்சவடா
உன்ன நினைச்சு ஓ... ஓ...

தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி

எட்டு ஊரு சந்தையில எம்பது பேரு பாக்கையில
உன்ன கட்டி புடிச்சி கடிக்க போறேன் நானே நானே
ஏ குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வச்சு
Case'u ஒண்ணு போட்டுருவேன் மானே மானே
அடி ஆத்தி, அடி ஆத்தி
எனக்கிப்ப பிடிக்குது உன்ன
இது என்ன, இது என்ன நான் எத்தனை தடவை சொன்னேன்
இது காதல் இல்லை அதுக்கும் மேலே தான் ஓ... ஓ...
அடி சிறுக்கீ நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நினைச்சி நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓ... ஓ...

தாலியே தேவையில்லை நான் தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி



Credits
Writer(s): Hari, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link