Uyirile

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

ஏன் எனை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

அருகினில் உள்ள தூரமே
அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா
போதாதா
நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வராதா
கூடாதா
நீ சொல்லு

இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் மருக
என்ன செய்வேனோ

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

ஏதோ ஒன்று என்னை தடுக்குதே
பெண் தான் நீ நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தேறாமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே

வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

ஏன் எனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே



Credits
Writer(s): J Harris Jayaraj, Subramanian Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link