Neengatha Ennam - From "Vidiyum Varai Kaathiru"

நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்ஜோடு உண்டு

என்னங்க அது?

ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்

நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்ஜோடு உண்டு

ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்

மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது

அதுபோலவே உனைக்காண நான் அலை பாய்கிறேன்

மழையாக மாறுவேன்
மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன்மேனியை
அன்பே உன் உறவினை அனுபவிப்பேன்

நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்ஜோடு உண்டு

காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்

என்னென்ன சொல் இன்னாளிலே நிறைவேற்றுவேன்

தீராத ஆசைகள்
ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்

நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்ஜோடு உண்டு

ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்

நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்ஜோடு உண்டு

ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link