Pudhu Varalaare

புது வரலாறே புறநாநூறே இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா
தொடு வால் கூறே நெடுநாள் போரே முடிவிகைக் காண தீர்வே வா வா
துடித்திடும் ஏரே பயமறியாதே வெடித்திடும் கிடங்கே நீ தான் வா வா

மழைத்துளி பிரிவதில்லை கடலாய் எழுமே
விடுதலைப் பிறந்தப்பின்னே உனக்கேன் பயமே
கத்தும் கத்தும் கடல் போல் எங்கள் உள்ளம் இருக்கும்
காதை மூடி கிடந்தால் ஊரே தூளாய் வெடிக்கும்

நாளை நம் தலைமுறைகள் பகை நீங்கி வாழட்டுமே அலை மேல் மிதக்கும் நிலவாய்
புது வரலாறே புறநாநூறே இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா

ஒளித்திறல் உடைவதில்லை கரையை தொடுமே
தடை வரும் நிலைகள் இங்கு ஒளி போல் எழுமே
காடே சுற்றி எரிந்தும் ஆற்றில் மீன்கள் பிழைக்கும்
வாழ்வில் மொத்தம் இழந்தும் எங்கள் பிள்ளை ஜெயிக்கும்
வாழ்வெங்கும் இரவாக ஒரு போதும் வருவதில்லை உனையே துணையாய் தருவாய்

புது வரலாறே புறநாநூறே இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா



Credits
Writer(s): Uma Devi, Ghibran Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link