Kadhalaada

உன்னோடு வாழ்வதே ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

காதலாட காதலாட
காத்திருந்தேனே ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே

ஓயாத தேன்மழை
அதை ஏந்தவே புது பூமி செய்வோமே

உன்னோடு வாழ்வதே ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

நீலவானம் மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே

பொல்லாத போர்களில்
உன் வேர்வையாக பூத்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கைபிடித்து ஓடுகின்றேனே

ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே
பிள்ளை தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே

ஆ. ம்ம்ம் உன்னோடு வாழ்வது ஆனந்தமே யேஹே
உன்னோடு உன்னோடு ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே



Credits
Writer(s): Anirudh Ravichander, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link