Azhagazhaga

அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே

அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

வெண்ணிலா என்பது வானை நீங்கிட
ஏங்கிடுமோ...
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும்
மங்கிடுமா...

யாருது வாசல் என்று பார்த்து
சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்திமாலை

கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது
உண்மையிலே .
அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ
கைகளிலே...

தாயவள் பாசம் தந்தையின் நேசம்
சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவெனெ தானே
யாருமே உருவானோம்

மனம்போல் வாழ
உறவே ஊஞ்சல் கயிறாக
அசையும் உயிரே

அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link