Kadhal Vennila

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன்
பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன்
கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து
சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே



Credits
Writer(s): A R Rahman, Pa Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link