Kaatriley Nadanthene

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே நான் என்னை வியந்தேனே
அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன்
விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

உயிரே உயிரே ரெண்டானதே... ஓ...
இளமை உடைந்து திண்டாடுதே... ஓ...
பாறை கரைந்து பாலானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
வானம் எந்தன் தலைதட்டுதே
வார்த்தை என்னுள் கவிகட்டுதே
நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்

மூச்சு காற்றிலே நுழைந்தாயே
பூச்சு போட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே
சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா
ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே நான் என்னை வியந்தேனே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Arivumathi
Lyrics powered by www.musixmatch.com

Link