Allola Kallolam

அல்லோல கல்லோலம்
அல்லோல கல்லோலம்

அல்லோல கல்லோலம்
என்ன நெனச்சாலும்
அல்லோல கல்லோலம்
என்ன பண்ணினாலும்

காதல் என்னும் பூதம்
வந்து விளையாட
நாலு பேரு பாத
மாறி எங்கோ போக

வாழ்க்க ஒரு கதையதான்
சிறப்பா எழுதுதே
முடிவென்ன...
எப்போதும் சொல்லாதே

ஏதோ ஒரு நம்பிக்கையில்
பயணம் தொடருதே
இலக்கு இல்லாம
எதுக்கும் நில்லாம

நேரத்தை பாத்தாலே
அது பாரத்த கூட்டாத
வானத்தில் தன்னால
சின்ன வெளிச்சம் வராதா
கேள்விக்கு எல்லாமே
விடை சொல்லிட்டு போகாதா

நண்பனோட துன்பமெல்லாம்
தன்னுடைய துன்பமென்று
எண்ணி எண்ணி மனசு ஒன்னு
தவிக்கிரதே

சொந்தம் கூட மறந்து விடும்
பந்தமெல்லாம் பறந்துவிடும்
நட்புக்குள்ள பிரிவேதுவும்
கிடையாதே
பொண்ணுக்குள்ள மனசுண்டு
லட்சியமும் அதிலுண்டு
அதை உண்மை ஆக்கிடவே
ஆசை வராதா

இன்னோருத்தர் லட்சியதில்
கல்லெரிஞ்சு பாக்குற
மோசமான பழக்கமும்
இங்கே ஓயாதா

முல்லு தொட்டாலும்
பூ காயத்தை பார்க்காது
வெற்றிக்கு முன்னாலே
பட்ட காயங்கள் நிக்காது

வேதனை வந்தாலும்
அது கானாம போயாச்சே
சோகத்தின் பின்னால
ஒரு சந்தோசம் வராதா

சோகத்தின் பின்னால
ஒரு சந்தோசம் வராதா
சோகத்தின் பின்னால
ஒரு சந்தோசம் வராதா



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Niranjan Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link