Neengum Bothil

நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் ஏதோ சாரலோ
மூங்கில் மோதி தென்றல் போகும் போது பாடலோ

தூரம் கூட பாரம் ஏற காற்றில் மௌனமோ
ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு நேரம் முடியுமோ

நெருங்கிடும் எண்ணம் வருகையில்
அது விலகிடும் விந்தை ஏனடி
கைகளில் யாவும் தருகையில்
அதை இழந்திடும் நிலையில் நானடி

ஒரு பூவில் வாழ்ந்திடும்
வாசனை மறையுதே
என் உயிரில் ஒரு வலி
மென்மையாய் நிறையுதே

காணும் கனவுகள்
வேகமாய் கலையுதே
சுகமான பயணங்கள்
முட்களாய் குத்துதே

அருகினில் நீயும் இருக்கையிலும்
நெஞ்சம் தனிமையை உணருதே
பிரிந்திடும் என்றும் தெரிந்திடும்
உறவின் அறிமுகம் கொடுமையே

பழகிய நாட்கள் தந்த இன்பமோ
அழகிய வானவில்லை போலவே
நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ

பூ மழை போல உந்தன் நியாபகம்
தீ மழை ஆக என்ன காரணம்
இனி வரும் காலம் மெல்ல தேங்குமோ
அனுபவம் ஒன்று கடந்து போகுமோ

போகும் பாதை போகும்
ஆன போதும் வேண்டுமே
உன்னை பிரியும் எல்லை
தோன்றும் வரை உன் பார்வை நீளுமே

திரும்பாமல் சென்றிடும் போதும்
உன் நினைவுகள் திரும்புமே
நீ இல்லாத போதும்
உன்னை என்றும் விரும்புமே(விரும்புமே)



Credits
Writer(s): Niranjan Bharathi, Yuvanshankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link