Masi Masanthan (From "Oorkavalan")

ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம் கட்டுறா
ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா
மச்சானுக்கும் மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா

மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு
எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு

நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு
சொந்தமுன்னு ஆயாச்சு
சோகமெல்லாம் போயாச்சு

பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்
தொட்டு தொட்டு
வரும் பந்தம் இது
அட தொத்திக் கொண்டு
வந்த சொந்தம் இது
ஆயிரம் காலங்கள் கூடியது

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு
பொன்மானே உன்னாலே
பூங்காத்தும் தீயாச்சு

அஞ்சு வகை பூபாணம்
மன்மதனும் போட்டாச்சு
அந்திப் பகல் இனிமேலே
கட்டிலறை பாட்டாச்சு

நித்தம் இது போலே
மடி மேலே விழவா
எந்நாளுமே இனி உன்னோடு தான்
என் ஜீவனும் உன் பின்னோடு தான்
நாளொரு நாடகம் ஆடிடத் தான்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்

பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை தான்



Credits
Writer(s): Shankar - Ganesh, Valee
Lyrics powered by www.musixmatch.com

Link