Kaathirundhen

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை

நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியதென்றும் நான்கூட அதே நிலை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை

முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்
பல கனவு மோதும் காகிதம் நானேனே
அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்
குறு முகத்தை தேடும் கார்முகிழ் நானேனே

பேசாத கதை நூறு
பேசும் நிலை வரும் போது
வார்த்தையென எதுவும் வராது
வராது வராது மௌனம் ஆனேனே

காலம் உறைந்தே போகும்
காற்று அழுதே தீரும்
இந்த நொடி இறந்தாலும் சம்மதம்
கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை

நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியதென்றும் நான்கூட அதே நிலை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை



Credits
Writer(s): S Thamari, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link