Malarodu Pirandhavla ( From "Iniyavaley")

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள்தானா இவள்தானா இவள்தானா

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா

வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா
கண்களிலே காதலர்கள் போர்க்களமா

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா

உன்தீண்டலில் உயிர்வரை வேர்க்கிறேன்
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்

உன் நாணத்தை ஆசகம் கேட்கிறேன்
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்

இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா

உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்
என் கண்களால் காதலை பேசுவேன்

சந்தனசிலையா செய்தது மன்மத கலையா
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
காதலே காதலே புதுகவிதையா தாய்மடி
வாய்மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள்தானா இவள்தானா இவள்தானா



Credits
Writer(s): Seeman Seeman, Deva Deva
Lyrics powered by www.musixmatch.com

Link