Thenmadurai Vaigai Nadhi

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது...
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை

தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை

கண்ணோடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு

பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே

உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link