Paada Vandhadhor Gaanam

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்

கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்

அன்பே!
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

மூடி வைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
மூடி வைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு

இதயம் உறங்காது இமைகள் இறங்காது
இதயம் உறங்காது இமைகள் இறங்காது

தேனே!
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link