Eeramaana Rojave

ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம், போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம், போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சார்த்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சார்த்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு

பொன்னாரமே

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம், போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்து பிள்ளை

என் காதலி

உன் போல என் ஆசை தூங்காது ராணி
கண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே
ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம், தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link