Ondraagudhae

மண்ணெல்லாம் கண்களாய் நீ
பார்க்கிறாய் என் காதல் பாலையே
நீ பூக்கிறாய் என் மார்பில்
மண் புயலாய் என் கண்ணிலே
ஓர் கயலாய் செந்திராட்சைக்
கள்ளென்றாகி போதையாகி ரத்தத்தை
நிறங்கூட்டினாய்

என் காதலும் உன் போதையும்
ஓர் தீண்டலிலே ஒன்றாகுதே
உன் தேகமும் என் மோகமும்
ஓரு முத்தத்திலே ஒன்றாகுதே

என் ஈரமும் உன் வீரமும்
ஓரு சேரலிலே ஒன்றாகுதே
உன் தீப்பொறி என் ராத்திரி
மெய் கூடும் நொடி ஒன்றாகுதே

தண்ணீரிலே இரு பாம்புகள்
புணரோவியம் வரைகின்றன
சில நூறு மீன்களோ கண் விரித்துதான்
காதல் தீயில் நனைந்தன

பாவையைப் பார்த்து மென்கொல்கிறாயே
உன் பேச்சு ஏனோ கொல்லாமல் கொல்லுதோ
கால் இடை நெஞ்சில் கண் மேய்கிறாயே
விரகத்தை ஏனோ தூண்டாமல் தூண்டுதோ

உனதருகே என் மனமே
எரிதழலாய் சுகந்தருமே
பேராசையோடு கேட்கின்றேன் என் அன்பே
உயிராய் எனில் நீ வேண்டுமே

என் காதலும் உன் போதையும்
ஓர் தீண்டலிலே ஒன்றாகுதே
உன் தேகமும் என் மோகமும்
ஓரு முத்தத்திலே ஒன்றாகுதே

உன் தீப்பொறி என் ராத்திரி
மெய் கூடும் நொடி ஒன்றாகுதே



Credits
Writer(s): Madhan Karky, Mithun Sharma
Lyrics powered by www.musixmatch.com

Link