Veerane

ஆதி ஆதி ஆழம் கேட்டு
ஆற்பறிக்கும் காடு
ஓரமான காட்டை வெல்ல
கூடி வேட்டையாடு
நீதி கேட்டு நீதி கேட்டு
தீப்பிடிக்கும் காடு
சீறும் காலைக் கூட்டம் போது
சிங்கமே நீ ஓடு

ஆத்திரங்கள் ஆறும் மட்டும்
தூக்கம் இல்லையே
போர்களத்தில் காயம் உண்டு
தோல்வி இல்லையே
விடாமல், துணிந்தால், வேங்கையையே
கொள்ளும் பூனையே

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டுப்பாடு
கை கட்டிடாதே, பகையை விட்டிடாதே
புது பானக் கூட்டம் பாடும்
உன்னை முந்தி ஓடு

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டுப்பாடு
சுட்டாலும் தீயிலே
மான் கொம்பு வாழும்
கூர் தீட்ட தீட்ட கோவம் கூடும்

செயல் செய்திடும்
களம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம்
செயல் செய்திடும்
களம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றே

கடிவாளம் பூட்டும் கையை நீயே
ஒருநாளும் நம்பாதே
தலை மோதும் போது மூழும் வீரம்
வீணே வெம்பாதே

வாள் எடுத்து நின்றப்பின்னே
வார்த்தை ஏதும் இல்லையே
தோற்பறித்து தோலுயர்த்தி காட்டு உண்மையை

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டுப்பாடு
தொட்டாலும் தேனியே கொட்டித்தீர்ககும்
ஒன்றாக கூடி கூட்டைக் காக்கும்

தனிப் பொந்தில் கேக்கும் கூகைச் சத்தம்
காட்டை தாண்டாதே
அதிகாரம் காட்டும் பேயின் ஆட்டம்
ஞாயம் பாக்காதே

காக்கை கூட்டம் போடும் கூச்சல்
மாட்டுக்கான யுத்தமே
குஞ்சை காக்க கொக்கறிக்கும்
கோழி நித்தமே

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டுப்பாடு
கை கட்டிடாதே, பகையை விட்டிடாதே
புது பானக் கூட்டம் பாடும்
உன்னை முந்தி ஓடு

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டுப்பாடு
சுட்டாலும் தீயிலே
மான் கொம்பு வாழும்
ஒன்றாகக் கூடி கூட்டைக் காக்கும்

செயல் செய்திடும்
களம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம்
செயல் செய்திடும்
களம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றே



Credits
Writer(s): A R Rahman, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link