En Uyire Vaa

என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே
மலர் தூவும் மழை சாரல்
மனம் எங்கும் ஒரு கூதல்
மலர் தூவும் மழை சாரல்
மனம் எங்கும் ஒரு கூதல்

என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே

காளிதாசன் காதல் காவியம்
நேரில் காணும் நாளிது
காமதேவன் தேரின் ஓவியம்
கோடி சேரும் தோளிது

பார்வை அம்பு பாய்ந்தது
பார்த்து பார்த்து தேய்ந்தது
மாலை நேரம் ஓய்ந்தது
மானும் மார்பில் சாய்ந்தது

காதல் பாட்டு பாடாது
கண்கள் இன்று மூடாது
தேகம் தேடி கூடாது
தென்றல் வந்து ஆடாது
பூவிது பொன்னிது தூவும் போது

என் உயிரே வா என் உயிரே
மலர் தூவும் மழை சாரல்
மனம் எங்கும் ஒரு கூதல்
என் அருகே வா என் உயிரே

மாலை சூடும் மாலை நேரமே
காலை நெஞ்சில் பாரமே
மாலை போல கூடி சேருமே
போதை இன்னும் ஏறுமே

காதல் என்னும் மோகனம்
காதில் வந்து கூறவா
கன்னி வேக வாகனம்
கண்டு நானும் மாறவா

கன்னம் என்னும் தேன் கிண்ணம்
இன்னும் தூறும் பூவண்ணம்
இன்னும் கொஞ்சம் தா என்னும்
இன்றும் என்றும் நீ என்னும்
காலையும் மாலையும் காதல் ராகம்

என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே
மலர் தூவும் மழை சாரல்
மனம் எங்கும் ஒரு கூதல்
மலர் தூவும் மழை சாரல்
மனம் எங்கும் ஒரு கூதல்

என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link